விராட்டுடன் ஒப்புமை
பாகிஸ்தானின் இளம்வீரர் பாபர் அசாம் அந்த அணியின் சிறப்பான வீரராக கருதப்படுகிறார். தனது சமீபத்திய ஆட்டங்களின்மூலம் சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இவரது பேட்டிங் ஸ்டைல் விராட் கோலியின் பேட்டிங்குடன் ஒப்புநோக்கப்படுவதால், இவர் அடுத்த விராட் கோலி என்ற பாராட்டுக்கு உரியவராகியுள்ளார்.
பேட்டிங் கோச் கோரிக்கை
இந்நிலையில் விராட் கோலி போல பல்வேறு சாதனைகளை புரிய பாபர் அசாமிற்கு 5 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் அதுவரை இதுவரையும் ஒப்புநோக்க வேண்டாம் என்றும் இத்தகைய ஒப்புமைகள் தனக்கு பிடிப்பதில்லை என்றும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும் தற்போதைய பேட்டிங் கோச்சுமான யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
பாபர் அசாமிற்கு திறமை உள்ளது
விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராகவும் அனைத்து வடிவங்களிலும் சிறந்து விளங்குவதையும் சுட்டிக் காட்டியுள்ள யூனிஸ் கான், அதேபோன்ற திறமை பாபர் அசாமிற்கும் உள்ளதாகவும், இன்னும் 5 ஆண்டுகளில் அவர் கோலியின் சாதனைகளை முறியடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
பாபரின் மனவளத்தை பராமரிக்க வேண்டும்
அவர்கள் இருவரையும் இன்னும் 5 ஆண்டுகள் கழித்து ஒப்புநோக்கினால் அது சரியாக இருக்கும் என்றும் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். பேட்டிங் கோச்சாக, பாபர் அசாமின் மனவளத்தையும் சிறப்பாக பராமரிக்க தான் விரும்புவதாகவும் அவர் பல்வேறு உயரங்களை தொடுவதை காண விரும்புவதாகவும் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய சாதனைகளையும் பாபர் அசாம் முறியடிக்க வேண்டும் என்றும் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.