முதல்நாள் ஆட்டம்
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அபித் அலி 39 ரன்களும்,அப்துல்லா சஃபிக் 25 ரன்களும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய கேப்டன் பாபர் அசாம் 71 ரன்கள் சேர்க்க, அசார் அலியும் அரைசதம் கடந்தார். பாகிஸ்தான் அணி 88 ரன்களக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோரில் இருந்த போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
மகிழ்ச்சி
இந்த நிலையில் ஜாவத் புயல் காரணமாக, வங்கதேசத்திலும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 2வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. மைதானம் முழுவதும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த வங்கதேச வீரர் ஷகிபுல் ஹசன், அங்கிருந்து மைதானத்திற்குள் ஓடி வந்து தண்ணீரில் பாய்ந்து நீச்சல் அடித்து விளையாடினார்.
சர்ச்சை
ஷகிபுல் ஹசனின் இந்த செயல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சர்ச்சை ஒன்றில் ஷகிபுல் ஹசன் சீக்கியுள்ளார். இம்மாத இறுதியில் வங்கதேச அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் தாம் பங்கேற்க விரும்பவில்லை என்று ஷகிபுல் ஹசன் கூறியதாக தெரிகிறது
|
ஷகிபுல் ஹசன்
ஆனால் முறையான காரணத்தை தெரிவித்தால் தான் ஓய்வு, இல்லை எனில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று கூறிய வங்கதேச கிரிக்கெட் வாரியம், அவரையும் அணியில் சேர்த்தது. இதனால் கடுப்பில் இருந்த ஷகிபுல் ஹசன், தற்போது கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை வெறுப்பு அடைய செய்யவே, ஆட்டம் கைவிடப்பட்டதை மகிழ்ச்சியாக கொண்டாடியதாக கூறப்படுகிறது.