லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆடுவதற்கு வங்கதேசம் அணிக்கு, தகுதியுள்ளது என்று அந்த அணி கேப்டன் மஸ்ரபே மொர்டசா தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது வங்கதேசம். ஏற்கனவே ஆஸி.க்கு எதிரான போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் கிடைத்த புள்ளிகளும் வங்கதேசத்திற்கு வலு சேர்க்கிறது.
நியூசிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய மொர்டசா, வங்கதேசம் அணி அரையயிறுதி செல்ல தகுதியுள்ள அணியாகும். இதற்கு, இனி வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம் என்றார்.