சூப்பர் ஓவரில் சொதப்பல்
கடந்த திங்கட்கிழமை ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டி டிரா ஆனதால் சூப்பர் ஓவர் நிர்ணயிக்கப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தவறான முடிவே தோல்விக்கு காரணம் என்று வர்ணனையாளர்கள் கெவின் பீட்டர்சன் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர்.
சூப்பர் ஓவரில் இடம்பெறாத கிஷான்
முதலில் ஆடிய ஆர்சிபி 201 ரன்களை குவித்த நிலையில், அடுத்ததாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் இஷான் கிஷான் மற்றும் கீரன் பொல்லார்டு ஆகியோர் 4 ஓவர்களில் 79 ரன்களை குவித்து, போட்டியை டிரா செய்தனர். இதையடுத்து போடப்பட்ட சூப்பர் ஓவரில் கிஷான் இடம்பெறவில்லை.
குறைந்து போயிருக்க மாட்டார்
அவர் இறுதி ஓவர்களில் விளையாடி சோர்வானதால் சூப்பர் ஓவரில் இடம்பெறவில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா காரணம் தெரிவித்தாலும், அந்த இறுதி 2 நிமிடங்களில் விளையாடுவதால் அவர் ஒன்றும் குறைந்து போயிருக்க மாட்டார் என்று வர்ணனையாளர்கள் கெவின் பீட்டர்சன் மற்றும் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தவறான முடிவு
போட்டி ஒருவகையில் சிறப்பான பார்ட்னர்ஷிப்பில் சென்று கொண்டிருந்த நிலையில், அதை உடைத்து கிஷானுக்கு பதிலாக ஹர்திக்கை களமிறக்கியது நல்ல முடிவு அல்ல என்றும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 2வது போட்டியில் டெல்லி கேபிடல்சுக்கு எதிரான போட்டியில் இதேபோல மயங்க் அகர்வாலுக்கு பதிலாக பூரனை இறக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தவறான முடிவையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.