புதிய அணிகள்
ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தின் போது, அனைத்து அணிகளுக்கும் குறிப்பிட்ட அளவிலான வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் வசதிகள் செய்துக்கொடுக்கப்படும். இதே போல ஒரு வீரரை அணியில் இருந்து விடுவித்துவிட்டாலும் கூட அவரை எந்தவித போட்டியும் இன்றி அதே அணியே வாங்கிக்கொள்ளும் வசதிகளு கொடுக்கப்பட்டன. ஆனால் அடுத்தாண்டு ஐபிஎல்-ல் அவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
புதிய அறிவிப்பு
இந்நிலையில் ஏலம் முறையில் புதிய அறிவிப்பை ஒன்றை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், ஏலத்திற்கு முன்னதாகவே தங்களுக்கு வேண்டிய வீரர்களை வாங்கிக்கொள்ளும் வசதி புதிய அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஏலத்தில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு வீரரும் விண்ணப்பிப்பார்கள். அப்படி விண்ணப்பிக்கும் வீரர்களில் குறிப்பிட்ட அளவிலான வீரர்களை ஏலத்திற்கு முன்னதாகவே அணிகள் வாங்கிக்கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு
வீரர்களும், அணி நிர்வாகங்களும் ஆலோசனை மேற்கொண்டு ஊதியத் தொகையும் முடிவு செய்துக்கொள்ளலாம். ஆனால் எத்தனை வீரர்களை முன்கூட்டியே வாங்கிக்கொள்ளலாம் என்ற தகவலை பிசிசிஐ அறிவிக்கவில்லை. எனினும் 3 முதல் 4 வீரர்கள் வரை வாங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
மற்ற அணிகளுக்கு ஆப்பு
அனைத்து அணிகளிலும் முக்கிய வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனைத்து அணிகளும் முணைப்பு காட்டி வருகிறது. ஆனால் அவற்றிற்கு ஆப்பு வைத்துள்ளது இந்த அறிவிப்பு. பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல்.ராகுல், டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் வேறு அணிகளுக்கு செல்ல தயாராக உள்ளனர். எனவே அவர்களை சுலபமாக புதிய அணிகள் வாங்கிவிடுவார்கள்.