பரிசுத் தொகை
இந்த நிலையில், உலக கோப்பையை வென்ற U-19 இந்திய அணி வீரர்களுக்கு தலா 40 லட்சம் ரூபாயை பரிசுத் தொகையைக வழங்குவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இதே போன்று இந்திய U-19 இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் பி.சி.சி.ஐ. கூறியுள்ளது.
கங்குலி-ஜெய்ஷா வாழ்த்து
இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி அளித்துள்ள வாழ்த்து செய்தி, 40 லட்சம் லட்சம் என்பது பி.சி.சி.ஐ.யின் சிறிய ஊக்கத் தொகை தான், ஆனால் உங்கள் உழைப்பு மதிப்புமிக்கது. அழுத்தமான சூழலில் சிறப்பாக விளையாடியதாக கூறினார். பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா, கடுமையான சூழலில் பெற்றுள்ள இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. வரலாற்றை படைக்கும் வெற்றியை இளம் வீரர்கள் படைத்துள்ளதாக ஜெய் ஷா பாராட்டினார்.
யுவராஜ் சிங் வாழ்த்து
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த மகத்தான வெற்றியை பெற்றதற்காக தேசமே பெருமை கொள்வதாக தெரிவித்தார். ராஜ் பவா, ரவிகுமார் சிறப்பாக பந்துவீசியதாக குறிப்பிட்டுள்ள யுவராஜ் சிங், இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார். நெருக்கடியான கட்டத்தில் நிஷாந்த் விளையாடிய ஆட்டம் பிரமிப்பில் ஆழ்த்தியதாகவும் அவர் கூறினார்.
Recommended Video
மைகேல் வாகன் வாழ்த்து
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய அணி பல ஆண்டுகளாக வேகப்பந்துவீசி வரும் ஆல் ரவுண்டருக்காக தவம் இருப்பதாகவும், அதற்கு கிடைத்த விடை தான் ராஜ் பவா என்றும் கூறியுள்ளார்.இந்திய அண்டர் 19 அணியின் செயல்பாடு பிரமிக்க வைத்ததாகவும் அவர் கூறினார்.