ஆஸி தொடர்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரிகள் அமைக்கும் பணி நடைபெறுவதால் , எந்த ஒரு போட்டியும் சென்னையில் நடத்தப்படவில்லை. இதனால் தமிழக ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வரவுள்ளது.வரும் செப்டம்பர் 20ஆம் தேதி மொஹாலியில் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது.
3 டி20 போட்டி
செப்டம்பர் 23ஆம் தேதி நாக்பூரில் இரண்டாவது டி20 போட்டியும், செப்டம்பர் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் மூன்றாவது டி20 போட்டியும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வரவுள்ளது.
தென்னாப்பிரிக்கா டி20 தொடர்
அதன்படி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்திலும் இரண்டாவது டி20 போட்டி அக்டோபர் ஒன்றாம் தேதி கவுஹாத்தியிலும், மூன்றாவது டி20 போட்டி அக்டோபர் மூன்றாம் தேதி இந்தூரிலும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து அக்டோபர் ஆறாம் தேதி லக்னோவில் முதல் ஒருநாள் போட்டியிலும், அக்டோபர் 9ஆம் தேதி ராஞ்சியில் இரண்டாவது ஒருநாள் போட்டியும் நடைபெறும்.
டி20 உலககோப்பைக்கு முன்
அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.இந்த தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவுக்கு நேரடியாக செல்லும் இந்திய அணி அங்கு 2 பயிற்சி ஆட்டத்தில் பங்கே இருக்கிறது இது முடிந்தவுடன் அக்டோபர் 23ஆம் தேதி டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.