தேதி
14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்கும் எனவும் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் மே 30ம் தேதி நடைபெறும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏப்ரல் 9-ந்தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
எந்தெந்த மைதானங்கள்
மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய 6 மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய மைதானங்களில் தலா 10 போட்டிகள் வீதம் 40 போட்டிகளும், டெல்லி மற்றும் அகமதாபாத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளன.
அணிகளுக்கு செக்
மொத்தமுள்ள 6 மைதானங்களில் லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் 4 மைதானங்களில் விளையாடும். இதில் அனைத்து அணிகளுக்கு பொதுவான இடத்திலேயே ஆட்டங்கள் நடைபெறும். எந்தவொரு அணிக்கும் ஹோம் அட்வாண்டேஜ் கிடையாது. பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் ஹோம் அட்வாண்டேஜ் குறித்து முறையிட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும், பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணிகள் லீக் போட்டியின் போது 3 முறை மட்டுமே வெளியூர்களுக்கு பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.