ரஞ்சி ஆட்டம் போதும்
அஸ்வின், இஷாந்த் சர்மா இருவரும் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். இவர்கள் நவம்பர் 24 அன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்ல உள்ளனர். இவர்கள் இருவரும் அடுத்த ரஞ்சி போட்டியில் பங்கேற்றால் அது முடிய நவம்பர் 23 ஆகும். இது மட்டுமல்லாமல், இவர்கள் இருவரும் டெஸ்ட் அணியில் முக்கிய வீரர்கள் ஆவர். அதையும் கருத்தில் கொண்டே பிசிசிஐ இவர்கள் ரஞ்சி தொடரில் ஆடியது போதும் என கூறியுள்ளது.
பயிற்சிப் போட்டியில் இஷாந்த், அஸ்வின்
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடருக்கு முன் ஒரே ஒரு நான்கு நாள் முதல் தர டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆடவுள்ளது. டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இஷாந்த் மற்றும் அஸ்வின் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இந்த போட்டி நவம்பர் 28 துவங்க உள்ளது.
இஷாந்த் சர்மா காயம்
இஷாந்த் சர்மா கடைசியாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அந்த தொடரின் முடிவில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீள நீண்ட ஓய்வு எடுத்துக் கொண்டார். அதற்காக, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இஷாந்த் ஆடவில்லை. அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பந்து வீசினார். அடுத்து தியோதர் தொடர் மற்றும் ரஞ்சி தொடரில் தொடர்ந்து ஓய்வின்றி ஆடி வருகிறார்.
ஷமிக்கும் கட்டுப்பாடு
இவர்கள் இருவரும் தவிர டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள முகமது ஷமியையும் ரஞ்சி போட்டி விஷயத்தில் பிசிசிஐ கட்டுப்படுத்தியுள்ளது. ஷமி நிச்சயம் ரஞ்சி தொடரில் ஆட விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே, அவருக்கு ஒரு இன்னிங்க்ஸுக்கு 15 ஓவர்கள் மட்டுமே வீச வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் விளையாட அனுமதி அளித்துள்ளது. அதைப் பற்றிய முழுமையான தகவலை இங்கே படிக்கலாம்.
முகமது ஷமிக்கு ஓவரே கொடுக்காதீங்க.. பிசிசிஐ உத்தரவு.. ஒப்புக் கொண்ட கேப்டன்