பி.சி.சி.ஐ. விளக்கம்
இந்த நிலையில், விராட் கோலி விவகாரத்தில் பி.சி.சி.ஐ. சார்பாக பொருளாளர் அருண் தும்மால் தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது, அவரது தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்தார். டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுமாறு, அவருக்கு பி.சி.சி.ஐ. எந்த அழுத்தத்தையும் தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அழுத்தம் தரவில்லை
டெஸ்ட் அணியில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டதாகவும், பல வெற்றிகளை பெற்றுள்ளதாகவும் பாராட்டினார். இதனால், டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் விராட் கோலி 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்றே பி.சி.சி.ஐ. விரும்பியதாகவும் அவர் கூறினார். ஆனால் தற்போது விராட் கோலியே தனிப்பட்ட முறையில் விலகுவதால், அவரது முடிவை பி.சி.சி.ஐ. மதிப்பதாக தெரிவித்தார்.
ரசிகர்கள் குற்றச்சாட்டு
இந்த நிலையில், பி.சி.சி.ஐ.யின் விளக்கத்திற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 3 மாதங்களாவே விராட் கோலிக்கு பி.சி.சி.ஐ. அழுத்தத்தை கொடுத்ததாகவும், அணி தேர்வில கூட விராட் கோலிக்கு சுதந்திரம் அளிக்கப்படவில்லை என்றும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர்
டிவிட்டர் டிரெண்டிங்
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில், பி.சி.சி.ஐ.க்கு எதிராக பல ஹேஷ்டேக்களை போட்டு பி.சி.சி.ஐ. கும்மி வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான கங்குலியையும் விராட் கோலி ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை. இனி இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது கடினமே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.