சரிந்த டிஆர்பி
இந்த நிலையில், குஜராத், லக்னோ அணிகள் சிறப்பாக விளையாடினாலும், அவர்களது போட்டியை காண பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வம் எழவில்லை. மேலும் ஐபிஎல் தொடரின் டிஆர்பி கடந்த ஆண்டு வாரங்களை ஓப்பிடும் போது 20 சதவீதத்திற்கு மேல் குறைந்தது.இதற்கு காரணம் சீசன் தொடக்கத்தில் சென்னை, மும்பை அணி பெற்ற தோல்வி தான் காரணம்.
குறைந்த ஆர்வம்
தற்போது சிஎஸ்கே அணியும், மும்பை அணியும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் தொடரை விட்டு வெளியேறியது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் உடைய அணிகள் பிளே ஆப் விளையாடவில்லை என்றால், அந்த போட்டிகளை காண அவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதனால் ஐபிஎல் தொடரின் டிஆர்பி மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.
கலக்கத்தில் பிசிசிஐ
ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு விளம்பரங்களுக்கு கூடுதல் கட்டணத்தை வசூல் செய்ய பிசிசிஐ முடிவு எடுத்தது. ஆனால், சிஎஸ்கே, மும்பை அணிகள் இல்லாததால் பிசிசிஐ கலக்கத்தில் உள்ளது. டிஆர்பியும் குறைவாக இருப்பதால் விளம்பரத்தாரர்களும் கட்டணத்தை குறைக்க ஸ்டார் நிறுவனத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.
அடுத்த ஏலம்
இதனிடையே, 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை உயர்த்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. ஆனால் பார்வையாளர்கள் சரிந்துள்ளதால் நினைத்த வருமானம் எட்ட முடியாத நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது. தங்களுடைய அணிகளை மெகா ஏலம் உடைத்ததற்காக தோனியும், ரோகித்தும் பிசிசிஐக்கு ரிவெங்ச் வைத்துவிட்டதாக ரசிகர்களும் கிண்டல் அடித்தனர்.