பவுலிங் தேர்வு
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். பிறகு பேட்டியளித்த வில்லியம்சன், தற்போது நிலவும் சவுத்தாம்ப்டன் வானிலைக்கு பவுலிங் செய்வதே சிறந்தது என்று கூறினார்.
பிளேயிங் லெவன்
இந்திய கேப்டன் விராட் கோலியும், வில்லியம்சன் கூறியதை அப்படியே வழிமொழிந்தார். டாஸ் வென்றிருந்தால், பவுலிங் தேர்வு செய்திருப்போம் என்று கூறியுள்ளார். இதில், மற்றொரு சுவாரஸ்யம் என்னவெனில், இந்திய அணி தனது பிளேயிங் லெவனை மாற்றவில்லை.
அணியை மாற்றாத பிசிசிஐ
இந்திய அணி வீரர்கள் விவரம். ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷாப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா என்று பிளேயிங் லெவனில், இந்திய அணி எந்தவித மாற்றமும் மேற்கொள்ளவில்லை.
பெஸ்ட் 11 வீரர்கள்
முன்னதாக, இந்திய அணி பிளேயிங் 11 மாற்றம் குறித்து இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் பேட்டி அளித்திருந்தார். அதில், "பல நிலைமைகளை ஆராய்ந்து கணக்கீடு செய்த பிறகே பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 11 வீரர்களும், எந்த சூழ்நிலையிலும், எந்த வானிலையில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என்றே நினைக்கிறேன். இவர்கள் தான் அணி என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஒருவேளை மாற்றம் தேவை என்று நினைத்தால், அதன் பிறகு முடிவு செய்யப்படும்" என்று கூறியிருந்தார். அவர் கூறியது போல, இந்திய அணியின் பிளேயிங் லெவன் மாற்றப்படவில்லை.