நீண்ட நாள் தொடர்
அங்கு வரும் டிசம்பர் 17ம் தேதி முதல் 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகள் என நெடும் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடுகிறது. தற்போது ஓய்வில் உள்ள இந்திய சீனியர் வீரர்கள், இந்த தொடரின் போது மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர். இதனால் இந்திய குழுவானது வரும் 9ம் தேதியன்று தனி விமானம் மூலம் அங்கு புறப்படவிருந்தது.
சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு
ஆனால் அது தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கூட 2 பேருக்கு அந்த வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது. மேலும் புறப்படும் தேதியும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் தயக்கம்
இந்நிலையில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து இந்திய அணிக்குள் மனக்கசப்புகள் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சுற்றுப்பயணம் செல்வது குறித்து முடிவெடுக்க வீரர்கள் மற்றும் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் பலரும் அங்கு செல்ல தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
Recommended Video
அணிக்குள் குழப்பம்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி தொடரை நடத்தியே தீர வேண்டும் என பிசிசிஐ உள்ளது. ஆனால் தங்களின் பாதுகாப்பு தான் முக்கியம் எனவும் தொடரை ரத்து செய்தே தீர வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்திய அணிக்குள்ளேயே தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.