டெஸ்ட் தொடர் 5ம் தேதி துவக்கம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளன. வரும் 5ம் தேதி துவங்கி சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் தொடர்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
தமிழக அரசு மறுப்பு
முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் 50 சதவிகித ரசிகர்களை அனுமதிப்பது குறித்து தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநில அரசுகளிடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியது. மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் சுகாதாரத்துறையிடம் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழக அரசு மைதானத்தில் ரசிகர்களை அனுமதிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
ரசிகர்களை அனுமதிக்க ஆலோசனை
இந்நிலையில் தற்போது டி20 தொடரில் 50 சதவிகித ரசிகர்களை மைதானத்தில் அனுமதிப்பது குறித்து பிசிசிஐ திட்டமிட்டு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. ஆனால் இது குறித்து இறுதி முடிவு அரசின் கைகளில் உள்ளதாகவும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ரசிகர்களை அனுமதிக்க தயக்கம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் தற்போது கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சாராருக்கு தற்போது கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட்டு வரும் நிலையில் நிலைமை முழு கட்டுப்பாட்டிற்கு இன்னமும் வரவில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் மைதானத்தில் ரசிகர்களை அனுமதிப்பதில் ரிஸ்க் எடுக்க மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன.