உச்சத்தில் கொரோனா
தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் வரும் 23ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் முடிந்ததும் பிப்ரவரி மாதம் இந்திய அணி தனது சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொணட தொடரில் விளையாட உள்ளது. கொரோனா உச்சமாக இருக்கும் கால கட்டத்தில் இந்த தொடரை எப்படி நடத்துவது என்ற சிக்கல் பி.சி.சி.ஐ.க்கு எழுந்துள்ளது.
6 போட்டிகள்
அகமதாபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் முறையே மூன்று ஒருநாள் போட்டிகளும், கட்டாக், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் முறையே டி20 போட்டியும் நடைபெற திட்டமிட்டுள்ளது.ஆனால் கொரோனா கால கட்டத்தில் 6 ஊர்களில் ஆட்டங்களை நடத்துவது வீரர்களுக்கு பாதுகாப்பு இருக்காது
பி.சி.சி.ஐ. திட்டம்
இதனால், அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வீரர்கள் விமான நிலையங்களுக்கு சென்று வருவதை தடுக்க முடியும் என்று பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. எனினும் வீரர்களுக்கே பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டால் தொடரை ரத்து செய்வதை விட வேறு வழி இல்லை, ஒரு வேலை தொடர் ரத்து செய்யப்பட்டால், வேறு ஒரு காலக் கட்டத்தில் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ. முடிவு எடுக்கும்.
அனுமதி இல்லை
ஆனால், தொடர் ரத்தானால் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் இதனை தடுக்க, தொடரை எப்படியாவது பாதுகாப்பாக நடத்த பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. மேலும் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் எப்படி நடைபெறுகிறது என்பதை பொருட்டு தான் ஐ.பி.எல். உள்ளிட்ட மற்ற போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.