காமன்வெல்த் கிரிக்கெட்
அதன்படி இந்திய மகளிர் அணி பாகிஸ்தான், நியூசிலாந்து என முன்னணி அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது. ஆனால் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் துரதிஷ்வசமாக தோற்றதால் வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 161/8 ரன்களை சேர்த்தது.
இந்திய அணி தோல்வி
இதன்பின்னர் ஆடிய இந்திய அணி அதிரடியாக ரன் குவித்த போதும், மறுபுறம் விக்கெட்கள் வேகமாக சரிந்தன. இதனால் 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கெல்லாம் இந்திய மகளிர் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தங்கப்பதக்கத்தை தவறவிட்டது. எனினும் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு நாடுகள் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.
கங்குலியின் ட்வீட்
இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் பதிவு மட்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ட்வீட் போட்டிருந்த அவர், " வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள். ஆனால் இன்று அவர்கள் மிகுந்த வருத்தத்துடன் தான் வீட்டிற்கு செல்ல வேண்டும். ஏனென்றால் அவர்களுடைய ஆட்டத்தில் சொதப்பியுள்ளனர் என்பது போல் குறிப்பிட்டிருந்தார்.
குவியும் விமர்சனங்கள்
இதனை பார்த்த ரசிகர்கள், " பிசிசிஐ-ன் தலைவராக இருந்துக்கொண்டு நாட்டு வீராங்கனைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்து ஊக்கப்படுத்த வேண்டிய கங்குலி, அவர்களை தாழ்த்தி பேசுவதா?, வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு அவர்கள் பெருமைதான் படுவார்கள். நீங்களே அவர்களை விமர்சிக்காதீர்கள், ஒரு தலைவராக அது நல்லதல்ல? என ரசிகர்கள் கோபத்தில் விமர்சித்து வருகின்றனர்.