கொரோனா
இதனிடையே பி.சி.சி.ஐ. நடத்தும் சேலஞ்சர்ஸ் டிராபி தொடரில் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வீரர்கள் மற்றும் அணியின் பெயர் விவரத்தை விடுவிக்காத பி.சி.சி.ஐ., அவர்களை தணிமைப்படுத்தியுள்ளது.
விதியில் மாற்றம்
தற்போது ஓமைக்கரான் போன்ற புதிய கொரோனா வைரஸ்கள் உலகையே அச்சுறுத்தி வருகிறது. அதன் தன்மை எப்படி இருக்கும், எத்தனை நாட்கள் கழித்து அறிகுறிகள் தெரியும் என்று தெரியாத நிலையில், பி.சி.சி.ஐ. தனிமைப்படுத்திகொள்ளும் நாட்களை குறைத்துள்ளது அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கோரிக்கை
இதனிடையே, விஜய் ஹசாரோ கோப்பை, ரஞ்சி கோப்பை என அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளதால் பி.சி.சி.ஐ. முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதே வேளையில், ரஞ்சி கோப்பை போன்ற நெடுந்தொடரில் வீரர்கள் பயோ பபுளில் இருந்தால், அது அவர்களின் மனதை பாதிக்கும் என்பதால், ரஞ்சி கோப்பையின் போட்டிகளை குறைக்க வேண்டும் என்று கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
Recommended Video
அச்சுறுத்தல்
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி தொடர்ந்து அங்கு அச்சுறுத்தலை மீறியும் விளையாடி வருகிறது. அவர்கள் நாடு திரும்பினால், அந்த வீரர்களை எப்படி கையாள வேண்டும், அவர்களை எத்தனை நாள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் போன்ற விதிகளை தற்போது பி.சி.சி.ஐ. வகுக்க வேண்டும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.