மும்பை: இந்திய உள்ளூர் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்திருக்கிறது.
உலக கோப்பையில் மிகவும் திறமையற்ற அணியாக பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் சிறப்பாகவே ஆடியது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக அதன் ஆட்டம் நன்றாகவே இருந்தது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ பல தருணங்களில் உதவி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் தொடர்களை டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது. பின்னர், அந்த மைதானத்தை ஆப்கானிஸ்தான் சொந்த மைதானமாக பயன்படுத்தவும் அனுமதி வழங்கியது.
வரலாற்றை பாருங்கள்.. தோனி காலத்தில் சச்சின், கங்குலி, டிராவிட், லக்ஷ்மனுக்கு என்ன நடந்தது தெரியுமா?
உலக கோப்பையில் ஒரு போட்டியிலும் ஜெயிக்காததால் கிரிக்கெட்டை மேம்படுத்த ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உலக கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட குல்பதின் நைப் அதிரடியாக நீக்கப்பட்டு, 3 வித அணிகளுக்கும் ரஷீத் கான் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்களையும் சேர்த்து கொள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது. அதனை பிசிசிஐ முற்றிலும் நிராகரித்தது.
ஆப்கானிஸ்தான் கோரிக்கைக்கு செவிமடுத்தால், அது இந்தியாவில் உள்ள இளம் வீரர்களுக்கு பாதிப்பாக அமையும். அவர்களின் வாய்ப்புகள் தட்டி பறிக்கப்படும் விதமாக அமையும். ஆகையால், அந்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்திருக்கிறது.