வீழ்த்தியது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி இல்லாமல் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கும் உரிய முக்கியத்துவத்தை அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் இதுவரை கோலிக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. கோலி சொல்வதே அணிக்குள் வேத வாக்காக இருந்தது.
பயிற்சியாளர்
பயிற்சியாளர் ரவி சாஸ்திரியாக இருந்தாலும் கோலி எடுக்கும் முடிவே எப்போதும் இறுதியானதாக இருக்கும். அணியின் தேர்விலும் கோலி எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும். ஆனால் இனி அணியில் கோலிக்கு சமமான மதிப்பு மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
குறைவான மதிப்பு
கோலி இல்லாமலே இந்திய அணி வென்றுவிட்டது. இந்திய அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட வகையில் உலகத்தரமான வீரர்கள். எல்லோருக்கும் அணியின் நுணுக்கம் தெரிந்துள்ளது. கோலி, ராகுல், ரஹானே, ரோஹித் என்று கேப்டனாகும் தகுதி கொண்ட பலர் அணியில் உள்ளனர்.
எல்லோருக்கும் மரியாதை
எல்லோருக்கும் முழு மரியாதை கொடுக்க வேண்டும். எல்லோரும் தனிப்பட்ட வகையில் கடினமாக உழைக்கிறார்கள் என்பதால் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. வரும் இங்கிலாந்து தொடரில் வீரர்களை ஒரே மாதிரி நடத்தும் எண்ணத்தில் பிசிசிஐ இருப்பதாக கூறப்படுகிறது.