வாய்ப்பு
இந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் பந்தை சொரசொரப்பாக எச்சில் தடவுவார்கள். பந்து சொரசொரப்பாக இருக்கும் போது நன்றாக ஸ்விங் ஆகும்.
ஸ்விங்
பந்தை இப்படி ஸ்விங் செய்ய வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பக்கத்தில் எச்சில் தடவி அதன் தோல் பகுதியை உரிப்பார்கள். ஆனால் கொரோனா காரணமாக பந்துகளில் எச்சில் தடவ கூடாது என்ற விதி இருக்கிறது. கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த விதி கொண்டு வரப்பட்டது.
பென் ஸ்டோக்ஸ்
இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவி மாட்டிக்கொண்டார். சில வீரர்கள் பழக்க தோஷத்தில் இப்படி எச்சில் தடுவுவது வழக்கம். ஒரே அணி இரண்டு முறை இந்த தவறை செய்தால் அவர்களின் 5 ரன்கள் குறைக்கப்படும்.
தவறு
நேற்று இங்கிலாந்து அணி முதல்முறை இந்த தவறை செய்ததால் கள நடுவர் கடுமையான வார்னிங் கொடுத்தார். அதன்பின் பந்தை வாங்கி அதில் சானிடைசர் வைத்து லேசாக துடைத்தனர். பந்தை மொத்தமாக கழுவ முடியாது என்பதால் லேசாக சானிடைசர் வைத்து துடைத்துவிட்டு மீண்டும் பவுலிங் செய்ய அதை கொடுத்தனர்.