புதியதாக தேர்வு
தொடர்ந்து பவுலிங் பயிற்சியாளராக பரத் அருணும், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கருக்கு பதிலாக விக்ரம் ரதோர் புதியதாக தேர்வு செய்யப்பட்டார்.
எழுந்தது கேள்வி
அதன் பின், இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் பணியாற்றி வந்தார். ஆனால் அவர் பேட்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படாததை தொடர்ந்து உதவி பயிற்சியாளராக யார் இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பரத் அருணுக்கு வாய்ப்பு
இந்நிலையில் அந்த பொறுப்பில் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் நியமிக்கப் படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவுலிங் பயிற்சியாளராக ஆன பிறகு அணியில் பாராட்டத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ளதால் அவர் உதவி பயிற்சியாளர் பொறுப்புக்கு சரியானவராக இருப்பார் என்று கருதப்படுகிறது.
கடும் அதிருப்தி
மேலும் உலக கோப்பையில் தோனியின் பேட்டிங் ஆர்டர் விவகாரத்தை வெளியில் சொன்னதால் அவர் மீது பிசிசிஐ தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக தெரிகிறது. அதன் காரணமாகவும் இந்த முடிவுக்கு பிசிசிஐ தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் அறிவிப்பு?
பிசிசிஐ தலைமை அதிகாரி ராகுல் ஜோக்ரி இந்தியா வந்தவுடன், அவருடன் ஆலோசித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், உலக கோப்பை தோல்வியின் தாக்கம், மேலும் பல மாதங்கள் வரை நீடிக்கும் என்று தெரிகிறது.