தொடர் நாயகன்
காயத்தால், தனது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், தற்போது பழைய ஃபார்மை மீட்டு எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கூட குறைவான ரன்களை விட்டு கொடுத்து 6 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் நாயகன் விருதை புவனேஸ்வர் குமார் தட்டி சென்றார். தற்போது அயர்லாந்து தொடரில் புவனேஸ்வர் குமார் துணை கேப்டனாக செயல்படுகிறார்.
உலக சாதனை
இதே போன்று அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் புவனேஸ்வர் குமார், தனது அற்புதமான ஸ்விங் பந்து மூலம், அயர்லாந்து கேப்டன் பால்பிரினை ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழக்க வைத்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்பிளேவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்தார்.
கட்டுக்கோப்பான பந்துவீச்சு
மற்ற பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டு கொடுத்தனர். ஹர்திக் பாண்டியா 2 ஓவருக்கு 26 ரன்களும், ஆவேஷ் கான் 2 ஓவருக்கு 22 ரன்களும், உம்ரான் மாலிக் ஒரு ஓவருக்கு 11 ரன்கள் விட்டு கொடுக்க, புவனேஸ்வர் குமார் 3 ஓவருக்கு 16 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.புவனேஸ்வர் குமார் டி20 உலகக் கோப்பையில் துருப்பு சீட்டு பந்துவீச்சாளராக இருப்பார் என்று கவாஸ்கரும் நம்பிக்கை தெரிவித்தார்.
பவர்பிளே சாதனை
புவனேஸ்வர் குமார் - 34 விக்கெட்
டிம் சௌதி - 33 விக்கெட்
சாமூவெல் பத்ரி- 33 விக்கெட்
ஷகிபுல் ஹசன்- 27 விக்கெட்
ஹேசல்வுட் - 26 விக்கெட்