ஆடுகளம்
முதல் டி20 போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றாலும், சூர்யகுமாரும், ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக விளையாடியதாக பாராட்டிய சாண்ட்னர், இதனால் பாட்டியின் நடு ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்தால் தான் எங்களால் வெற்றி பெற முடியும் என்று கூறினார். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சுலபமான காரியம் கிடையாது என்றும் அவர் கூறினார்.
ரன்குவிக்க வேண்டும்
ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த பிறகு தற்போது வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட சாண்டனர், முதலில் விளையாடி ரன்குவிக்க வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ஹர்திக், தாமும் முதலில் பேட்டிங் செய்ய தான் நினைத்தேன்.
அணியில் மாற்றம்
முதலில் பந்துவீசுவதால் எந்த கவலையும் இல்லை. . முதல் போட்டிக்கு பிறகு ஆடுகளத்தை குறித்து என்னால் கணிக்க முடியவில்லை. ரசிகர்கள் பலரும் குல்தீப் யாதவும், சாஹலும் இணைந்து விளையாட வேண்டும் என்று ஆசை பாட்டார்கள்.அதற்காக இன்றைய ஆட்டத்தில் நாங்கள் உம்ரான் மாலிக்கை நீக்கிவிட்டு, சாஹலுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறோம் என்று ஹர்திக் கூறினார்.
பிளேயிங் லெவன்
1, சுப்மன் கில், 2,இஷான் கிஷன், 3, சூர்யகுமார் யாதவ், 4, ராகுல் திரிபாதி, 5, ஹர்திக் பாண்டியா, 6, தீபக் ஹூடா, 7, வாசிங்டன் சுந்தர், 8, சாஹல், 9, குல்தீப் யாதவ், 10, ஆர்ஸ்தீப் சிங், 11, சிவம் மவி