ஜெய்ப்பூர் போட்டி
கடந்த ஆண்டு மே 12ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த போட்டிதான் தற்போது இந்த அறிக்கை மூலம் கவனிப்புக்குரியதாகியுள்ளது.
சென்னை - ராஜஸ்தான்
அன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.
தோற்றுப் போனது சென்னை
பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டோணி - ரெய்னா சீப் அவுட்
இப்போட்டியில் டோணியும், சுரேஷ் ரெய்னாவும் மோசமான முறையில் ஆட்டமிழந்தனர். ரெய்னா ஒரு ரன்னும், டோணி 2 ரன்களும் எடுத்தனர்.
நடந்தது என்ன...
அந்தப் போட்டியில் நடந்தது என்ன என்பது குறித்து சம்பத் குமாரிடம் கிட்டி அளித்த வாக்குமூலத்தில், ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் குறித்தும், அவர் புக்கிகளுக்கு சென்னையில் ஏற்பாடு செய்யும் விருந்துகள் குறித்தும் விளக்கியுள்ளார்.
டோணியுடன் நேரடித் தொடர்பு
மேலும் சென்னை அணியின் கேப்டன் டோணி, சென்னை அணியின் பிரின்சிபல் குருநாத் மெய்யப்பன் ஆகியோருடன் தான் தொடர்ச்சியான தகவல் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார் கிட்டி.
பிக்ஸ் செய்ய பேச்சுவார்த்தை
சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கிடையிலான ஜெய்ப்பூர் போட்டியை பிக்ஸ் செய்வது தொடர்பாக பேச்சு நடந்து வருவதாகவும், இதுகுறித்து குருநாத் மெய்யப்பன், டோணியிடமும், இன்னும் சிலரிடமும் பேசி இறுதி செய்யவுள்ளதாகவும் தன்னிடம் விக்ரம் அகர்வால் தெரிவித்ததாக கிட்டி கூறியுள்ளார்.
ஏப்ரலிலேயே பணம் கொடுத்து விட்டனர்
மேலும், இந்தப் போட்டியை பிக்ஸ் செய்வது தொடர்பாக ஏப்ரல் 27ம் தேதியே தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்துப் பணப் பரிவர்த்தனையையும் முடித்து விட்டனர் என்றும் கூறியுள்ளார் கிட்டி.
அகர்வால், மனைவி வந்தனாவின் மர்மத் தொடர்புகள்
விக்ரம் அகர்வாலுக்கும், அவரது மனைவி வந்தனாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூரில் பல மர்மமான தொடர்புகள் இருப்பதாகவும் கிட்டி கூறியுள்ளாராம்.
உறுதிப்படுத்த முடியவில்லை
கிட்டி சொன்ன விவரங்களை வைத்து விசாரித்த தமிழக சிபிசிஐடி போலீஸார், பெட்டிங் நடந்ததை மட்டுமே உறுதி செய்துள்ளனர். அதேசமயம், மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக எதையும் அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லையாம்.
கிட்டி சொல்வது உண்மையா..
கிட்டி சொல்வதைப் பார்த்தால் ஏதோ டோணியும் நேரடியாகவே சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது போல உள்ளது. ஆனால் இதில் உண்மை என்பது என்ன என்பது தெரியவில்லை.