ஓய்வு அறிவிப்பு
தற்போது கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 லீக்கில் டொரண்டோ நேசனல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் மாண்ட்ரியல் டைகர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியுடன், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மெக்கல்லம் திடீரென அறிவித்து உள்ளார்.
கடிதம் வெளியீடு
இது குறித்த கடிதம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். ஓய்வு முடிவு தமக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் இது போன்ற முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
மிகவும் வருத்தம்
அவர் மேலும் தமது கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட். அதனை விட்டுவிட்டு போவது என்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.
சவால்கள் முறியடிப்பு
கிரிக்கெட் போட்டிகளில் விளையாண்ட தருணத்தில் சந்தித்த பல சம்பவங்கள் இன்றும் பசுமையாக இருக்கின்றன. கடந்த காலத்தில் நான் எப்படி விளையாடி இருக்கிறேன் என்பதை திரும்பி பார்க்கிறேன். பல சவால்களை முறியடித்து மகிழ்ந்திருக்கிறேன்.
ஆர்வம், உருக்கம்
ஆனாலும் என்னுடைய வருங்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்பதை நினைத்து ஆர்வமாக இருக்கிறேன். அனைத்து நல்ல விஷயங்களும் என்றாவது ஒரு நாள் முடிவை எட்டும் என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும் என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.