சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களில் போட்டித் தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இதையொட்டி இங்கிலாந்து மற்றும் இந்திய வீரர்கள் சென்னையில் குவாரன்டைனில் உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் குவாரன்டைனில் உள்ள இங்கிலாந்து துவக்க வீரர் ரோரி பர்ன்ஸ் பும்ராவின் பந்துகளை எதிர்கொள்வது மிகுந்த கடினமான செயல் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதையொட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து துவக்க வீரர் ரோரி பர்ன்சும் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரை பார்த்ததாகவும் இந்தியா சிறப்பான ஃபார்மில் உள்ளதாகவும் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் பும்ராவின் பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடுமையானது என்றும் அவர் கூறியுள்ளார். மைதானத்தில் பிரத்யேகமான முறையில் சிறப்பாக அவர் பந்து வீசுவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.