முதல் டி20 போட்டி நாளை துவக்கம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஏறக்குறைய 6 வாரங்கள் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கான சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் நாளை துவங்கவுள்ளது.
இந்தியாவை தெறிக்க விட்ட நியூசிலாந்து
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியினர், 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
விராட் கோலி திட்டவட்டம்
இந்நிலையில் இந்தியாவின் உலக கோப்பை கனவை முறியடித்த நியூசிலாந்தை பழிவாங்கும்வகையில் இந்தியாவின் ஆட்டம் இருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, அத்தகைய எண்ணமில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.
விராட் கோலி பாராட்டு
நியூசிலாந்து போன்ற நல்ல அணியை பழிவாங்கும் நோக்கம் ஏற்படவில்லை என்று விராட் கோலி தெரிவித்தார். இந்த தொடரில் நியூசிலாந்துடன் போட்டி மட்டுமே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டி20 உலக கோப்பை தொடர்
வரும் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடைபெறவுள்ள நிலையில், ஒவ்வொரு டி20 போட்டியும் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ள கோலி, அதனால் அணி வீரர்கள் கவனமுடன் டி20 போட்டிகளை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.