சென்னை : ஐபிஎல் ஏலம் 2021 நடைபெற்றுள்ள நிலையில் இதில் ஆர்சிபி அணி க்ளென் மாக்ஸ்வெல்லை 14.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மாக்ஸ்வெல், ஆர்சிபி கோப்பையை வெல்வதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாக்ஸ்வெல் பன்முக திறமை கொண்டவர் என்று ஆர்சியின் கிரிக்கெட் இயக்குநர் மைக் ஹெசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏலம் 2021 நடைபெற்றுள்ள நிலையில், ஆர்சிபி அணி அதிகமான விலையில் வீரர்களை வாங்கியுள்ளது. இதில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் க்ளென் மாக்ஸ்வெல்லும் ஒருவர். அவரை 14.25 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி வாங்கியுள்ளது. இதேபோல கைல் ஜாமீசனையும் ஆர்சிபி 15 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மாக்ஸ்வெல், இந்த சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல தேவையான அனைத்தையும் தருவேன் என்றும் போட்டிகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே மாக்ஸ்வெல் பன்முக திறமை கொண்டவர் என்று ஆர்சிபியின் கிரிக்கெட் இயக்குநர் மைக் ஹெசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் ஆப்-ஸ்பின் பந்துகளை சிறப்பாக வீசுபவர் என்றும் அணிக்கு தேவையான அனைத்தையும் தரக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.