பரபரப்பு குற்றச்சாட்டு
இப்போது அணியின் தோல்விக்கு முழு பொறுப்பு கேப்டன் மோர்டாசா என்று ஷகிப் அல் ஹசன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:
நம்பினேன்
உலக கோப்பையில் நீண்ட தூரம் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும். அந்த விஷயத்தை நான் உறுதியாக நம்பினேன்.
செயல்பாடு எப்படி?
உலக கோப்பையில் நாங்கள் நினைத்தபடி எந்த விஷயங்களும் நடக்கவில்லை. ஒரு வீரர் சிறப்பாக விளையாடாத போது, அணி எப்படி விளையாடியது என்பதை காட்டிலும், தன்னுடைய செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.
கேப்டன் தான் பிரச்னை
இது உலக கோப்பையின்போது எங்களுக்கு பிரச்சனையாகி உருவெடுத்தது. இதே விஷயம் மோர்டாசாவுக்கும் நடந்தது. கேப்டன் சிறப்பாக விளையாடாத போது, அவருக்கும் பிரச்சனை. அப்புறம் அணிக்கும் பிரச்சனை. கேப்டன் சிறப்பாக விளையாட வேண்டும். வேறு வழியே கிடையாது என்றார்.