குடும்பம்தான் எனக்கு முக்கியம்
கோலி கிரிக்கெட்டா, குடும்பமா எது முக்கியம் என்பது குறித்து பேசுகையில், "8 வருடம் ஆகி விட்டது (சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கி), ஆனால், குடும்பம்தான் எனக்கு முக்கியம். கிரிக்கெட் என் வாழ்வின் அங்கம், ஆனால் குடும்பம் தான் எப்போதும் முக்கியம்" என கூறினார்.
இதெல்லாம் நம்பவில்லை
மேலும், "சிலர் வாழ்க்கை முக்கியம் என நினைப்பார்கள். அப்புறம், கிரிக்கெட்டை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அதற்கு நீங்கள் உண்மையாக இல்லை என்பார்கள். நான் அதை நம்பவில்லை" என கூறியுள்ளார்.
பேட்டை தொடவே மாட்டேன்
கோலி ஏற்கனவே ஓய்வுக்கு பின் என்ன செய்வீர்கள் என்பது குறித்து பேசுகையில் தான் ஓய்வுக்கு பின் பேட்டை தொடவே மாட்டேன். கிரிக்கெட் ஆடியது போதும் என்ற முடிவுக்கு பின் தான் ஓய்வு எடுப்பேன். அதன் பின் பேட்டை எடுக்கவே மாட்டேன் என கூறினார்.
நம்ப முடியவில்லை
கோலி இன்று கிரிக்கெட் உலகின் முன்னணி வீரராக இருக்கிறார். ஆனால், குடும்பம் தான் முக்கியம். கிரிக்கெட் வாழ்வின் ஒரு பகுதி தான் என கூறுவது நம்ப முடியாததாகவே இருக்கிறது.
கடும் உழைப்பு
கோலி கடந்த காலங்களை ஒப்பிடும் போது கிரிக்கெட்டில் உடற்தகுதியை பெற கடுமையாக உழைத்து வேறு ஒரு கோலியாக மாறியுள்ளார். ஆனால். கிரிக்கெட் முக்கியமில்லை என கூறியுள்ளார்.