ஐசிசியின் புதிய விதிகள்
இதுதவிர மேலும் சில விதிகளை கொண்டு வந்திருக்கிறது. அதாவது, ஸ்லோ ஓவர் ரேட் எனப்படும் மெதுவாக பந்துவீசும் நிலை இருந்தால் கேப்டன் மட்டும் பொறுப்பல்ல, மொத்த அணியும் பொறுப்பாகும். இதனால் அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். கேப்டனுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
11 வீரர்கள்
மேலும், காயமடைந்து வெளியேறும் வீரர்களால் அணிக்கு ஏற்படும் சிக்கலை தீர்க்க புதிய விதியை ஐசிசி அமல்படுத்துகிறது. கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை ஒரு அணியில் விளையாடும் 11 வீரர்கள் மட்டுமே பேட்டிங், பவுலிங் செய்து வந்தனர்.
வாய்ப்பு இல்லை
அவர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் பீல்டிங் மட்டும் தான் செய்வார். பேட்டிங்கோ, பவுலிங்கோ செய்ய அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாது. போட்டியின் போது ஒரு வீரர் காயம் காரணமாக விளையாடாமல் வெளியேறினால் அவர் ரிட்டையர்டு ஹர்ட் என்று அறிவிக்கப்படுவார்.
கோரிக்கை முன்வைப்பு
அதனால் வீரர் காயம்படும் அணிக்கு பேட்டிங்கிலும், பந்துவீச்சில் சிக்கல் நீடித்து வந்தது. தலையில் பலமாக அடிப்பட்டு வீரரால் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த மாற்றுவீரர்க்கு பேட்டிங் செய்ய அனுமதிக்க வேண்டும். இதே போன்று பந்துவீசவும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அனுமதித்த ஐசிசி
நீண்ட நாட்கள் ஆலோசனைக்கு பின் ஐசிசி தற்போது இந்த விதிக்கு அனுமதி வழங்கி உள்ளது. ஆடும் லெவன் அணியில் எந்த வீரராவது பலத்த காயம் காரணமாக வெளியேறினால் மாற்று வீரர் பேட்டிங் செய்யலாம், பந்துவீசலாம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது. அந்த தொடரில் முதன்முதலாக ஐசிசி அறிவித்து உள்ள இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.