முதலில் செஸ்
சாஹல் துவக்கத்தில் செஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதன் பின் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த போது அஸ்வின், ஜடேஜா அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
சாஹல் - குல்தீப் யாதவ்
அப்போது அவர்களுக்கு மாற்றாக சாஹல் - குல்தீப் யாதவ் ஜோடியாக இந்திய அணிக்குள் நுழைந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து "குல்ச்சா" என்றும் அழைக்கப்பட்டனர். இருவரும் விக்கெட் வேட்டை நடத்தி எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.
நம்பிக்கை
2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் சாஹல், குல்தீப் யாதவ் தனித் தனியாக இந்திய அணியில் இடம் பெற்று வந்தனர். சாஹல் சிறப்பாக பந்து வீசி இந்திய அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்ற வீரராக விளங்கி வருகிறார்.
நிச்சயதார்த்தம்
கொரோனா வைரஸ் பாதிப்பால் லாக்டவுனில் இருந்த போது அவர் தீவிரமாக டிக்டாக்கில் வீடியோக்கள் பகிர்ந்து வந்தார். டிக்டாக் ஆப் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதால் சில காலம் அமைதியாக இருந்தார். தற்போது திடீரென தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.
தனாஸ்ரீ வர்மா
தனஸ்ரீ வர்மா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அறிவித்துள்ளார். தனஸ்ரீ வர்மா மருத்துவர். ஆனால், அவருக்கு நடனத்தில் தான் ஈடுபாடு அதிகம். நடனம் சார்ந்த யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த சேனலை 15 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
ரசிகர்கள் ஆச்சரியம்
பிரபல டிக்டாக் கிரிக்கெட் ஸ்டார், யூட்யூப் நடன கலைஞருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்கள் சாஹலுக்கு தங்கள் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.
வாழ்த்துக்கள்
இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், இந்திய அணி பீல்டிங் பயிற்சியாளர் ரவி ஸ்ரீதர், வாஷிங்க்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார் ஆகியோர் சாஹலுக்கு தங்கள் வாழ்த்துக்களை பரிமாறி உள்ளனர். தனஸ்ரீ வர்மாவின் ரசிகர்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.