பிசிசிஐ வைக்கும் தேர்வு
2013ஆம் ஆண்டு இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட 5 ஒருநாள் போட்டியில் விளையாடியது. அப்போது சீனியர்களுக்கு ஒய்வு வழங்கப்பட்ட நிலையில், விராட் கோலி தான் கேப்டன் பொறுப்பை எற்றார். அதில் இந்திய அணி 5க்கு0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கோலியும், கேப்டனுக்கு தாம் சரியான நபர் என்பதை களத்தில் நிரூபித்தார்.
ராகுல் கேப்டன்
தற்போதும், அதே போன்ற ஒரு சூழல் வருகிறது. சீனியர்கள் இல்லாத நிலையில், கேஎல் ராகுல் கேப்டனாக இந்திய அணிக்கு அவசரம் அவசரமாக தேர்வு செய்யப்பட்டு அனுப்பபடுகிறார். இதில் ராகுல் எப்படி செயல்படுகிறாரோ, அதை வைத்து தான் கேப்டனாக நியமிக்கலாமா, வேண்டாமா என்று பிசிசிஐ முடிவு எடுக்கும்.
அக்னி பரீட்சை
ஏற்கனவே தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டனாக சொதப்பிய ராகுலுக்கு, தற்போது உடல் தகுதியிலும் பிரச்சினை எற்பட்டு விட்டது. பற்றாத குறைக்கு ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் கேப்டன் பொறுப்புக்கு தங்களது திறமையை நிரூபித்து காத்துள்ளனர். இதனால் ராகுலுக்கு ஜிம்பாப்வே தொடர் ஒரு அக்னி பரீட்சை போல் பார்க்கப்படுகிறது.
காத்திருக்கும் சவால்கள்
கேஎல் ராகுலுக்கு இருக்கும் முதல் சவாலே , ஜிம்பாப்வேக்கு எதிரான இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் ஓயிட் வாஷ் செய்ய வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. நடந்து முடிந்த தொடரில் வங்கதேசத்தை ஓட ஓட விரட்டி அடித்தது ஜிம்பாப்வே. எனவே ஜிம்பாப்வேவை சாதரணமாக நினைக்க முடியாது. அடுத்தது, ராகுல் தனது சொந்த பேட்டிங்கில் ரன் சேர்த்து, பேட்ஸ்மேனாக முதலில் அணியில் தனது இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மூன்றாவது நெருக்கடி நிலையில் கூலாக செயல்பட்டு, கேப்டனாக தனது தனி திறமையை நிரூபிக்க வேண்டும்.