கிரிக்கெட் பார்த்து ஜாலி
விஜய் மல்லையா தற்போது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை ஜாலியாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியை அவர் விஐபி காலரியில் அமர்ந்து பார்த்தது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
கவாஸ்கருடன் சந்திப்பு
மேலும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரையும் அவர் சந்தித்துப் பேசினர். பிர்மிங்காம் நகரில் இருவரும் நெருக்கமாக நின்றபடி பேசிக் கொண்டிருந்த புகைப்படம் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
அப்படித்தான் வருவேன்
இதுகுறித்து மல்லையா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான் இந்தியா ஆடும் எல்லாப் போட்டிகளுக்கும் கண்டிப்பாக வருவேன். இந்தியாவை உற்சாகப்படுத்துவேன் என்று அடித்துக் கூறியுள்ளார் மல்லையா.
சூப்பரப்பு
மல்லையா தெளிவாகத்தான் இருக்கிறார். நமது அதிகாரிகள்தான் மல்லையாவை "நாடு கடத்தி"க் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து "முடுக்கி" விட்டுக் கொண்டே உள்ளனர்.
கொண்டு வந்திருவாங்க நம்புவோம்.. அதுவரைக்கும் கிரிக்கெட் பார்ப்போம்.