2வது போட்டி
போட்டி குறித்து தல தோனி கூறியதாவது: மீண்டும் முதல் போட்டி போலவே 2வது போட்டியும் அமைந்து விட்டது. பிட்ச் பற்றி புகார் கூறுகிறோம். ஆனால் வெற்றி பெறுகிறோம்.
ரன் சேர்ப்பு கடினம்
இது போன்ற பிட்சுகளில் ஆட விரும்புகிறோம் என்று நான் கருதவில்லை. காரணம் எங்கள் பேட்ஸ்மென்களுக்கே ரன்கள் எடுப்பது கடினமாகி விடுகிறது. அதுவும் முதலில் பேட் செய்தால் சொல்லவே வேண்டாம். மிகவும் கடினம்.
சாதகமான பிட்சுகள் தேவை
பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்கள் அமைந்தால் சரியாக இருக்கும். அணியை வழிநடத்துவதில் எனக்கு என்று தனிப்பட்ட முறையில் திட்டம் கிடையாது. அணிச்சேர்க்கையை சேர்த்தாக வேண்டும். என்னை பொறுத்தவரை திட்டமிடுதல் எதுவும் இல்லை, அதிக திட்டமிடுதல் தேவையில்லை என்று தோனி கூறினார்.
சர்ச்சையான மைதானம்
முன்னதாக, ஐபிஎல் 2019 தொடக்கப் போட்டியானது, மிகுந்த எதிர்பார்ப்களுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த முதல் போட்டியில் மொத்தமாகவே 141 ரன்கள் எடுக்கப்பட்டது. அப்போதும் மைதானம் குறித்த சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.