சென்னை:என்ன இழவு வாழ்க்கைடா இது..? மேல பாத்தா ஐபிஎல் கப் என சென்னை அணியின் வீரர், தமிழ் புலவர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் கலக்கி வருகிறது.
சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். அவரது ஆட்டம் மட்டுமல்ல... ஒவ்வொரு முறையும் தமிழில் அவர் வெளியிடும் டுவிட்டர் பதிவுகளும் ஏக பிரமாதம்.
ஒவ்வொரு முறையும்... போட்டி முடிந்த பிறகு... ஹர்பஜன் ஏதாவது ஒரு டுவிட்டை தமிழில் தட்டிவிடுவார். ஒரு முறை நான் பாஜிடா என்று அவர் வெளியிட்ட டுவிட்டர் வைரலோ... வைரல்.
அடின்னா... இதுதான் அடி...! கடைசி ஓவரில் தோனியின் ஹாட்ரிக் சிக்ஸ்.. தாறுமாறாக வைரலான வீடியோ
அதேபோன்று தற்போது ஒரு டுவிட்டரை தட்டிவிட்டிருக்கிறார். அது கணக்கில்லாமல் வைரலாகி இருக்கிறது. அதுவும் ராஜஸ்தான் அணியுடனான வெற்றிக்கு பிறகு அவர் அந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
அவர் அதில் கூறியிருப்பதாவது:
ஒரு நாள் ஒரு டீம ஏழு டீம் துரத்த அந்த டீம் தடய தாண்டி @msdhoni புடிச்சி தொங்க,அந்த #தல மேட்சுல அடி வெளுக்க,என்னடா இழவு வாழ்கன்னு மேல பாத்தா @ipl கப்பு கீழ @CSKFansOfficial ஏழு டீமும் கப்பாவது மேச்சாவதுன்னு,கும்புடு போட்டு ஆஹானு சொன்னா.அது @ChennaiIPL #SuperDeluxe நன்றி சேது ஜி
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 31, 2019
ஒரு நாள் ஒரு டீம ஏழு டீம் துரத்த அந்த டீம் தடய தாண்டி @msdhoni புடிச்சி தொங்க,அந்த #தல மேட்சுல அடி வெளுக்க,என்னடா இழவு வாழ்கன்னு மேல பாத்தா @ipl கப்பு கீழ @CSKFansOfficial ஏழு டீமும் கப்பாவது மேச்சாவதுன்னு, கும்புடு போட்டு ஆஹானு சொன்னா.அது @ChennaiIPL #SuperDeluxe நன்றி சேது ஜி என்று அந்த டுவிட்டரில் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.