பிளே ஆப் உறுதியாகுமா?
அதேபோன்று கடந்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த சென்னை அணி அதில் இருந்து மீண்டு பிளேஆப் வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கோடு விளையாடுகிறது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார்.
மகிழ்ச்சியான ஒன்று
பின்னர் இந்த போட்டி மற்றும் மைதானம் குறித்தும் கேப்டன் தோனி கூறியதாவது : சென்னையில் எப்போதும் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். இந்த மைதானம் அதிக அளவு பந்துவீச்சுக்கு முதலில் ஒத்துழைக்கும்.
பந்துவீச்சு தேர்வு
இங்கு பலமுறை விளையாடி உள்ளதால், அந்த அனுபவத்தின் அடிப்படையில் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தேன். ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் விளையாடுகிறார்.
சுழற்பந்துக்கு சாதகம்
ஏனெனில், சென்னை மைதானம் அதிக அளவு சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். இதுபோன்ற மைதானங்களில் ஹர்பஜன் சிறப்பாக செயல்படுவார். எனவே தாக்கூரை நீக்கிவிட்டு ஹர்பஜன் இடம்பெற்றுள்ளார் என்று தோனி கூறினார்.