மும்பை: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஆர்சிபி அணி ஹால் ஆப் பேம் என்ற அந்தஸ்தை கிறிஸ் கெயில் மற்றும் டிவில்லியர்ஸ்க்கு வழங்கியது.
கிறிஸ் கெயில், தனது ஐபிஎல் வாழ்க்கையை கொல்கத்தா அணியில் தான் தொடங்கினார்.
பின்னர் பார்ம் அவுட் காரணமாக, அதன் பிறகு நடைபெற்ற ஏலத்தில் கெயிலுக்கு யாரும் வாய்ப்பு தரவில்லை.
அப்போது 2011ஆம் ஆண்டு கெயிலை தொடர் பாதியில் மாற்று வீரராக ஆர்சிபி அணியில் இணைந்தார். அன்று முதல் ஆர்சிபி அணியின் அடையாளமாக கிறிஸ் கெயில் விளங்கினார். ஆர்சிபி அணிக்காக கெயில் 91 போட்டியில் விளையாடி 3420 ரன்களும் விளாசியுள்ளனர்.விராட் கோலியின் உற்று நண்பனாகவும் கெயில் விளங்கினார்.
இந்த நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவுடன் நடைபெற்ற உரையாடலில், ஐபிஎல் தொடரிலேயே சிறந்த அணி என்றால் அது சிஎஸ்கே தான் என்றும், தோனி நம்பர் 1 கேப்டன் என்றும் கெயில் கூறினார். கெயிலின் இந்த பதிலை ஆர்சிபி ரசிகர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
ஆர்சிபி அணியின் ஹால் ஆப் பேம் அந்தஸ்து பெற்று 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், சென்னை தான் சிறந்த அணி என்று கெயில் கூறியுள்ளார். கெயிலின் இந்த பதிலை ஆர்சிபி ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்சில் வைத்து சிஎஸ்கே ரசிகர்கள் வெறுப்பேற்று வருகின்றனர்.