கலக்கல் ரசிகர்கள்
வழக்கமாக... ரசிகர்கள் தான்... மைதானத்தில் விதம், விதமாக கலக்குவார்கள். தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுவார்கள். இது ரசிகர்களின் தரப்பில் என்றால்.. தற்போது வர்ணனையாளர்களின் பேச்சுகள் அதற்கு மேலே.
வசீகரிக்கும் வர்ணனை
அதிலும் குறிப்பாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் வர்ணனையை ரசிக்க ஒரு கூட்டமே காத்திருக்கும். தொலைக்காட்சியில் போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கு அவரின் பேச்சு என்பதே ஒரு ஜாலிதான்.
சூப்பர் ஸ்பெஷல்
மிக அருமையாக... நம்ம ஊர் பாஷையான சென்னை தமிழில் அவர் புகுந்து விளையாடுவது தான் சூப்பர் ஸ்பெஷல். களத்தில் ஏதேனும் ஒரு வீரர் கேட்சை கோட்டை விட்டாலோ அல்லது ரன்களை எடுக்க சிக்சர் அடித்தாலோ தானே ஒரு ரசிகராக மாறி துள்ளிக் குதித்து வர்ணனை செய்வார்.
பஞ்சாப் போட்டியில் வர்ணனை
ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் ஜாலியாக பேசும் அவரது வர்ணனைக்கு ஏக மவுசு. பஞ்சாப், ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஸ்ரீகாந்தின் வர்ணனை சூப்பரோ... சூப்பர்.
அஸ்வின் பந்துவீச்சு
14வது ஓவரில் அவரின் வர்ணனையே ஒரு கலக்கலாக தான் இருந்தது. அந்த ஓவரை வீசியது (ஆளப்போறான் தமிழன்) அஸ்வின். பந்தை எதிர்கொண்ட வார்னர் அதை அடிக்க... நேராக பந்து அஸ்வினின் கைக்கு வந்தது.
நபி ரன் அவுட்
அதை அவர் பிடிக்க முயன்ற போது... கையில் பட்டு பந்து கீழே விழுந்தது. அதை கவனிக்காத முகமது நபி ரன் என்று நினைத்து கொண்டு வார்னர் இருந்த திசை நோக்கி நகர முயல்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரன் அவுட் செய்கிறார் அஸ்வின்.
டங்கினி பிட்டி கில்லேடி
அரங்கமே ஒரு கணத்தில் அதிர்ந்து.... அந்த விக்கெட்டுக்காக கைகளை தட்டி ஆர்ப்பரித்தது. அப்போது வர்ணனையாளர் தரப்பில் இருந்த ஸ்ரீகாந்தின் அறிவிப்பு சூப்பர். இந்த அவுட்டுக்கு என்ன பெயர் தெரியுமா என்று குஷியான அவர்.. டிங்கினி பிட்டி கில்லேடி என்று கூறி... அஸ்வினை பாராட்டினார்.
பாராட்டும் ரசிகர்கள்
அதே நேரத்தில் இறுதி கட்ட ஓவர்களில் பஞ்சாப் வீரர்கள் இருந்தனர். அப்போதும் சும்மா புகுந்து விளையாடினார் ஸ்ரீகாந்த். ஒக்கட்டி ஒன்று.. ரெக்கட்டி ரெண்டு என்ற அவரின் வர்ணனைக்கு ஏக பாராட்டுகள் கிடைத்தன என்றே சொல்லலாம்.