டெல்லி : சிபிஎல் 2020 தொடர் வரும் 18ம் தேதி மேற்கிந்திய தீவுகளின் ட்ரினிடாட் மற்றும் டோபாகோ ஆகிய பகுதிகளில் துவங்கி நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் முடங்கியிருந்த நிலையில், நடத்தப்படும் முதல் பெரிய டி20 தொடர் இது.
மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் லைவாக ஒளிபரப்பவுள்ள நிலையில், இதில் தற்போது இந்தி வர்ணனையாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிபிஎல் 2020 தொடர் வரும் 18ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 10ம் தேதிவரை நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச போட்டிகள் முடங்கியுள்ள நிலையில் தற்போது இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொரோனா முடக்கத்திற்கு பிறகு பிரம்மாண்டமாக நடத்தப்படும் முதல் டி20 தொடர் இது.
சோனி ஸ்போர்ட்ஸ் டிவி லைவாக இந்த தொடரை ஒளிபரப்ப உள்ளது. இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு துவங்கி 11.45 வரை இந்த தொடர் நடைபெறவுள்ளது. இதில் தற்போது இந்தி கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். ஆகாஷ் சோப்ரா, தீப் தாஸ்குப்தா உள்ளிட்ட இந்தி வர்ணனையாளர்கள் குறிப்பாக, பிசிசிஐயால் நீக்கப்பட்டுள்ள சஞ்சய் மஞ்ச்ரேகரும் இதில் இணைக்கப்பட்டுள்ளார். இதனால் ஐபிஎல்லுக்கு முன்னதாக சிபிஎல் இந்திய ரசிகர்களுக்கு சிறந்த கிரிக்கெட் அனுபவத்தை கொடுக்கும் என்று நம்பலாம்.
மக்கா... தல டீம்ல இல்ல... வாய்ப்ப பயன்படுத்திக்கங்க.. அம்புட்டுதான் சொல்வேன்.. வக்கார்