வீரர்களிடம் பதிவாகும்
இதுகுறதி்து கருத்து தெரிவித்துள்ள அப்ரிடி, உலக கோப்பை முடியும் வரைக்கும் நான்தான் கேப்டன் என்று தெளிவாக வாரியம் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலமாக, அடுத்த இரு ஆண்டுகளுக்கு நான்தான் தலைவர் என்ற எண்ணம் அணி வீரர்களுக்கு அழுத்தமாக பதிவாகியிருக்கும்.
கேப்டனை மாற்றினால் கஷ்டம்
என்னை கேப்டனாக தேர்ந்தெடுத்து கிரிக்கெட் வாரியம் சிறப்பான முடிவை எடுத்துள்ளது. கேப்டன்களை அடிக்கடி மாற்றினால் மற்றொரு வீரர் கேப்டன் பதவிக்கான போட்டியில் உள்ளார் என்பதுதான் அர்த்தமாகும். இதனால் வீரர்களுக்குள் இணக்கம் இல்லாத சூழ்நிலை நிலவும். இப்போது அதுபோல ஏற்படாது.
ஆட்டம்தான் முக்கியம், வெற்றியல்ல
நான் ஒழுங்காக விளையாடாமல் சக வீரர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளேன். எனவே எனது முழு ஆட்டத்திறனையும் வெளிக் கொண்டுவருவேன். என்னை பொறுத்தளவில் மைதானத்தில் முழு அர்ப்பணிப்போடு விளையாடுவதோடு நமது கடமை முடிந்தது. வெற்றி தோல்வி குறித்து கவலைப்பட்டு ஆட்டத்தில் கோட்டைவிடக்கூடாது. சிறப்பாக ஆடி தோற்றாலும் கூட ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களை புகழத்தான் செய்வார்கள்.
மிஸ்பாவுக்கு ஒத்துழைப்பு
ஒருநாள் போட்டிகளுக்கான அணி தலைவராக உள்ள மிஸ்பா-உல்-ஹக்கிற்கு நான் முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறேன். இனிமேலும் அதுபோன்ற ஒத்துழைப்பை அளிப்பேன். ஒரு போட்டித் தொடரில் சிறப்பாக ஆடாவிட்டால் உடனே கேப்டனை மாற்றும் போக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கைவிடுவது அணிக்கு நல்லது". இவ்வாறு சாகித் அப்ரிடி தெரிவித்தார்.