சிட்னியில் 3வது போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கிடையில் இந்த போட்டியுடன் சேர்த்து 4 டெஸ்ட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
28 பேருக்கு கொரோனா பரவல்
இந்நிலையில் சிட்னியின் கொரோனாவின் இரண்டாவது அலை காணப்படுகிறது. வடக்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் 28 பேர் கொரோனா வைரசால் பாதிப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆலோசனை
இந்நிலையில் சிட்னியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி
இந்த கொரோனா சூழலை அரசு சிறப்பாக கையாண்டு வருவதாகவும், அதனால் தாங்கள் எந்தவிதமான பதற்றமும் இன்றி இந்த சூழலை பொறுமையாக எதிர்கொள்வதாகவும் சிஏ தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து அந்த பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் 3 நாட்களுக்கு தங்களது வீடுகளில் முடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.