உலக கோப்பை கிரிக்கெட்
இந்நிலையில், வரும் மே மாதம் தொடங்கி நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்று கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா அமைப்பு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை வலியுறுத்தியுள்ளது.
கருத்து கூறாத இம்ரான்
இது தொடர்பாக அந்த அமைப்பின் செயலாளர் சுரேஷ் பப்னா பேசுகையில், புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இதுவரை எந்த கருத்தும் கூற வில்லை.
வாய் திறக்காதது ஏன்?
தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றால், அது குறித்து அந்நாட்டின் பிரதமர் கருத்துத் தெரிவிக்காதது ஏன்? புல்வாமா தாக்குதல் குறித்து வெளிப்படையாக அவர் கருத்துத் தெரிவிக்க வேண்டும்.
உண்மை நிலை என்ன
உண்மை நிலை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை என்றால் அவர்களின் பக்கம் ஏதோ தவறு இருக்கிறது என்றால் பொருள்.
மறைக்கப்பட்ட புகைப்படம்
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இருந்த இம்ரான்கானின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை எப்படி அகற்றுவது என்பது குறித்து முடிவெடுப்போம் என்று சுரேஷ் பப்னா கூறியிருக்கிறார்.