இம்ரான்கான் சொன்ன மாதிரி..
முன்னதாக பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் இந்தியாவை வீழ்த்த இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது. எனவே முதல் பேட்டிங் தேர்வு செய்து இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுங்கள் என கூறியிருந்தார்.
டாஸ் வென்ற இந்திய அணி
ஆனால் இந்திய அணி தான் டாஸ் வென்றது. இதனால் பேட்டிங்கா ஃபீல்டிங்கா என முடிவு செய்யும் உரிமையும் இந்திய அணிக்கே வழங்கப்பட்டது.
தூக்கி கொடுத்தாங்களே..
ஆனால் லட்டை போல் பேட்டிங்கை அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே தூக்கி கொடுத்தது இந்தியணி. இந்திய பந்து வீச்சு பெரிதாக சோபிக்கவில்லை.
எந்த தைரியத்தில் ஃபீல்டிங்
எந்த தைரியத்தில் இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்து பாகிஸ்தானை பேட்டிங் செய்ய பணித்தது என விமர்சகர்கள் விளாசத் தொடங்கி விட்டனர். ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி இதற்கு பதில் சொல்ல வேண்டும்.