தென்னாப்பிரிக்க தொடர்
ரோகித் சர்மா தலைமையிலான மெயின் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளதால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட புதிய படை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, தீபக் சஹார் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் சீனியர் வீரர்களே தென்னாப்பிரிக்காவுடன் திணறிய சூழலில் இளம் வீரர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ரசிகர்களின் ஏமாற்றம்
இந்நிலையில் போட்டியின் தொடக்கத்திலேயே பிரச்சினை உருவாகியுள்ளது. இன்று மதியம் 1 மணியளவில் டாஸ் போடப்பட்டு, 1.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் லக்னோவில் வானிலை மோசமாக இருந்ததால் அரைமணி நேரம் வரை டாஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
மீண்டும் ஏமாற்றம்
ஆனால் அறிவித்தபடி 1.30 மணியளவிலும் போட்டி தொடங்கப்படவில்லை. மழைவிட்ட போதும், வானிலை மோசமாக இருப்பதாக கூறி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெளிச்சமின்மை மற்றும் மழைத்தூரல் இருக்கலாம் என்பதால் பிட்ச் முழுவதும் மூடப்பட்டுவிட்டது.
மைதானத்தில் ஈரப்பதம்
மைதானம் முழுவதும் ஈரப்பதத்துடன் இருப்பதால், போட்டி தொடங்கும் நேரம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. சிறிது நேரத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே அதுகுறித்து தகவல் வெளியாகும். இதனால் போட்டியை காணவந்த ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.