ராயுடுவுக்கு வாய்ப்பில்லை
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடுவுக்கு அணியில் வாய்ப்பு இல்லை. இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் பிரசாத் கூறுகையில், அம்பதி ராயுடுவுக்கு சில வாய்ப்புகள் கொடுத்தோம். ஆனால், விஜய் சங்கர், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என 3 பரிமாணங்களில் அசத்துவதால் அவருக்கு வாய்ப்பு அளித்தோம் என்றார்.
|
3 டி வகை கண்ணாடி
உலககோப்பை அணியில் இடம் கிடைக்காத கோபத்தில் அம்பதி ராயுடு தனது ட்விட்டரில், "உலக கோப்பை போட்டிகளை பார்க்க இப்போதுதான் புதிய 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளேன் என்று கிண்டல் செய்து பதிவிட்டார்.
|
ஓஜா புகார்
இந்த ட்வீட்டுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராக்யன் ஓஜா பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது: சில ஹைதராபாத் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது. நானும் இதே சூழ்நிலைக்கு ஆளாகிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பாரபட்சம் இல்லை
ஓஜாவின் பதிவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறதோ... அதே அளவுக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. ஓஜா பவுலிங் சர்ச்சைக்குள்ளான பிறகுதான் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. அதில் எங்கிருந்து பாரபட்சம் வந்தது என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விளக்கம் வேண்டும்
அணி தேர்வில் பிசிசிஐ பாரபட்சம் காட்டுகிறது என ஓஜா கூறியிருப்பது, இந்திய கிரிக்கெட்டில் புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து பிசிசிஐ விளக்கம் அளிக்கும் வரை இந்த சர்ச்சை ஓயாது. அணி தேர்வில் இந்திய கிரிக்கெட் வாரியம் பாரபட்சம் காட்டுவதாக நீண்ட நாட்களாக எழுந்து வந்த புகாரில் உண்மை இருக்குமோ என்று ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.