|
சேவாக் கண்டனம்
நம் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான இந்த கோழைத்தனமான தாக்குதல் உண்மையில் வலிக்கிறது. இந்த வலியை சொல்ல வார்த்தைகள் போதாது. காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டுகிறேன் சேவாக் பதிவிட்டுள்ளார்.
|
விவிஎஸ் லக்ஷ்மன் வருத்தம்
நம் வீரம் நிறைந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீதான மோசமான தாக்குதல் பற்றி கேட்க வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திக்கிறேன் என தன் வருத்தத்தை பதிவு செய்தார் லக்ஷ்மன்.
|
தவான் ஆழ்ந்த வருத்தம்
இந்த செய்தியால் ஆழ்ந்த வருத்தத்திலும், அமைதியின்றியும் இருக்கிறேன். புல்வாமா தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தவான் கூறி உள்ளார்.
|
கௌதம் கம்பீர் கோபம்
கௌதம் கம்பீர் மிகவும் கோபமாக பதிவிட்டுள்ளார். "பிரிவினைவாதிகளிடம் பேசுவோம், பாகிஸ்தானிடம் பேசுவோம். ஆனால், இந்த முறை மேஜையில் அல்ல, போர்க்களத்தில். பொறுத்தது போதும்" என குறிப்பிட்டுள்ளார்.
|
கோலி ஷாக்
புல்வாமா தாக்குதல் குறித்து கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த வீரர்களுக்கு இதயம் கனிந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன் என கூறி உள்ளார் கோலி