லண்டன்: இந்திய அணி நிலைமையை சொல்ல இந்த ஒரு மீம் போதும். ஆமாங்க, நடப்பு உலக கோப்பையில், முதல் தோல்வியை, இங்கிலாந்துக்கு எதிராக பெற்றுள்ளது இந்தியா.
31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. கடைசி நேரத்தில், இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதும், கேதர் ஜாதவ் மற்றும் தோனியின் ஆமை வேக பேட்டிங்கும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தன.
ஆனால், இதையெல்லாம் விட முக்கியமாக ஒரு காரணம் இருக்கிறது என்று வறுத்தெடுக்கிறார்கள் ரசிகர்கள். அது இந்திய அணி ஜெர்சி வண்ணத்தை மாற்றியதுதானாம். ஆம்.. இதுவரை ப்ளூ வண்ணத்தில் காணப்பட்ட, இந்திய ஜெர்சி, இன்று ஆரஞ்சு அதாங்க, காவி வண்ணத்திற்கு மாற்றப்பட்டது.
நா இந்த மீம் 9:16 க்கே பன்னி வச்சுட்டேன் pic.twitter.com/E2aGBpgrVM
— கற்றது அரசியல் (@Learnedpolitics) June 30, 2019
இது மத்திய பாஜக அரசின் செயல்தான் என்று கூட நெட்டிசன்கள் குற்றம்சாட்டியிருந்தனர். கலர் மாறினாலும் மாறியது. இந்தியா முதல் முறையாக இந்த உலக கோப்பையில் தோல்வியடைந்துள்ளது.
இதை இந்த ஒரு மீம் அழகாக விளக்குகிறது. இந்தியாவிலும் சரி, இந்திய அணியிலும் சரி, காவிமயமாக்கப்பட்டால் இதுதான் நிலைமை என்கிறது இந்த ட்வீட். பிரபலமான வடிவேலு மீம்ஸை பயன்படுத்தி இந்த ட்வீட் போட்டுள்ளார் இந்த நெட்டிசன்.