பாகிஸ்தான் போட்டி
பாகிஸ்தான் போட்டியில் ராகுல் 57 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ராகுல் அந்தப் போட்டியில் மிக நிதானமாக ரன் சேர்த்தார். அது மட்டுமே சிலரால் விமர்சிக்கப்பட்டது. ஆனால், வெங்சர்க்கார் வேறு ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டி குற்றம் சுமத்தியுள்ளார்.
வெங்சர்க்கார் விமர்சனம்
ராகுல் பெரிய அளவில் ரன் அடிக்கும் திறன் பெற்றவர். பாகிஸ்தான் போட்டியில் அவர் சதம் அடித்திருக்க வேண்டும். ஆனால், அவர் தன் விக்கெட்டை விட்டுக் கொடுத்தார். அவர் சில முட்டாள்தனமான ஷாட்களை ஆடினார். அப்படி ஒரு ஷாட் ஆடலாம் நான் யாருக்கும் சொல்ல மாட்டேன். என்று கூறி ராகுலை விமர்சித்தார் வெங்சர்க்கார்.
என்ன பிரச்சனை?
பொறுமையாக, கொஞ்சம் சுயநலமாக பேட்டிங் செய்கிறார் ராகுல். எனினும், அதையும் மீறி முட்டாள்தனமாக ஷாட் ஆடி சதம் அடிக்கும் வாய்ப்புகளை, வெற்றிகளை நழுவ விடுகிறார். ராகுல் 150-170 ரன்கள் அடிக்கக் கூடியவர். ஆனால், அவர் அடிக்கும் தவறான ஷாட்களால் அவர் அதை தவற விடுகிறார் என்கிறார் வெங்சர்க்கார்.
ஐபிஎல் பார்ம்
ராகுல் ஐபிஎல் தொடரில் தான் தன் பார்மை மீட்டு எடுத்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக துவக்க வீரராக களமிறங்கிய ராகுல், போட்டிக்கு போட்டி ரன் குவித்து அசத்தினார்.
இனி செய்யக் கூடாது
ஆனால், வெங்சர்க்கார் கூறுவது போல தவறான சில ஷாட்களை அவர் ஆடாமல் இருந்தால், அவர் மேலும் ரன் குவிக்கவும், சதம் அடிக்கவும் வாய்ப்பாக இருக்கும். என்ன செய்யப் போகிறார் கேஎல் ராகுல்?