7ஆம் இடத்தில் தோனி?
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பண்டியா ஆகியோருக்குப் பின் ஏழாவது இடத்தில் தோனி களமிறங்கினார். ரவி சாஸ்திரி அது பற்றி கூறுகையில், "அது அணியின் முடிவு. எல்லோரும் அதே முடிவில் தான் இருந்தோம். அது எளிதான முடிவு" என்று சமாளித்தார். அணியில் எல்லா முடிவுகளும், கோலி, ரவி சாஸ்திரி தான் எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு என்பது நம்பும் வகையில் இல்லை என்பதே உண்மை.
அனுபவம் தேவை
அடுத்து, "தோனி முன்பே களமிறங்கி, ஆட்டமிழந்தால் சேஸிங்கே அங்கே இருக்காது. அவரது அனுபவம் கடைசி நேரத்தில் தான் தேவைப்பட்டது. அவர் மிகச் சிறந்த பினிஷர். அவரை அங்கே பயன்படுத்தாமல் போனால் அது பெரிய குற்றமாக இருக்கும்" என்றார்
கணக்கு போட்டு ஆடினார்
தோனி அந்த ரன் அவுட் மட்டும் தவிர்த்து, தோனி தன் மனதில் கணக்கு போட்டுக் கொண்டே இருந்தார். எந்த பந்தை அடிக்கலாம், நீஷம்-இன் கடைசி ஓவரில் எத்தனை ரன்கள் வரை எடுக்கலாம் என கணக்கு போட்டார். அவர் அதை செய்துவிட வேண்டும் என நினைத்தார் என்றார் ரவி சாஸ்திரி.
நான்காம் வரிசை பேட்ஸ்மேன்
இந்திய அணியில் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் சரியாக அமையாதது உலகக்கோப்பை தொடரில் பெரிய பிரச்சனையாக இருந்தது. அது குறித்து பேசுகையில், ராகுலை அந்த இடத்தில் களமிறக்க முதலில் முடிவு செய்தோம். ஆனால், ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டது. (அதனால், ராகுல் துவக்க வீரராக மாறினார். அதன் பின் விஜய் ஷங்கர் ஆடினார். அவருக்கும் காயம் ஏற்பட்டது. அதை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார் ரவி சாஸ்திரி .